மும்பையில் வரும் ஞாயிறு வரை மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தானே, பால்கர் மற்றும் ராய்காட் மாவட்டங்களில் கனமழை காரணமாக ஆரஞ்சு எச்சரிக்கை நீடிக்கிறது.
மும்பியில் அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) தெரிவித்துள்ளது. ஆகஸ்ட் 2, ஞாயிறு வரை மும்பையில் மஞ்சள் எச்சரிக்கை நீடிக்கும்; இக்காலகட்டத்தில் இடி மின்னலுடன் கூடிய கனமழை மற்றும் மணிக்கு 50-60 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.
மும்பையைச் சுற்றியுள்ள பால்கர், ராய்காட் மற்றும் தானே மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் மிக கனமான மழை மற்றும் இடி மின்னலுடன் கூடிய காற்றழுத்த தாழ்வு நிலை நீடிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
ஜூன் மாதத்தில் மழைப்பொழிவு குறைவாக இருந்தாலும், ஜூலை மாதத்தில் மும்பையின் சராசரி மழைப்பொழிவை விட 66 சதவீதம் அதிக மழை பதிவாகியுள்ளது. மேற்குக் கடற்கரையில் உள்ள குறைந்த அழுத்த மண்டலம் காரணமாக தற்போது இந்த மழையின் தாக்கம் அதிகமாக உள்ளது.