ஸ்ரீ சத்ய சாய் மாவட்டத்தில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததற்காக 27 வயது மதிக்கத்தக்க நபருக்கு அனந்தபுர ஸ்பெஷல் போக்சோ நீதிமன்றம் 25 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்துள்ளது. மேலும், அவருக்கு 5,000 ரூபாய் அபராதமும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும் அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

கதிரி நகரில் உள்ள என்ஜிஓ காலனியைச் சேர்ந்த எம். ராஜு என்பவர், இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 376 மற்றும் போக்சோ சட்டத்தின் பிரிவுகள் 3 மற்றும் 4 ஆகியவற்றின் கீழ் குற்றவாளி என நீதிமன்றம் கண்டறிந்துள்ளது. வெள்ளிக்கிழமை அன்று இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டது.

காவல் கண்காணிப்பாளர் எஸ். சதீஷ் குமார் கூறுகையில், குற்றம் சாட்டப்பட்டவர் தனது மனைவியின் முதல் திருமணத்தின் மூலம் பிறந்த சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளார் என்று தெரிவித்தார். பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயார் அளித்த புகாரின் பேரில் கதிரி நகர போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர்.