திருப்பதியில் 69 வயது முதியவர் கொல்லப்பட்ட வழக்கில் ரயில் லோகோ பைலட் கைது செய்யப்பட்டுள்ளார். நகை மற்றும் பணத்தை திருடுவதற்காக இந்த கொலையை அவர் செய்ததாக போலீசார் தெரிவிக்கின்றனர்.
திருப்பதி சாய் நகரில் கடந்த ஜூலை 14 அன்று 69 வயதான எம். ஜோதி என்பவர் தனது வீட்டில் கொலை செய்யப்பட்ட நிலையில் மீட்கப்பட்டார். குற்றவாளி பாசம் ரூபேஷ் குமார் (36), கிருஷ்ணாபட்ணம் நிலையத்தில் ரயில் லோகோ பைலாட்டாகப் பணிபுரிகிறார். தனது கடனை அடைப்பதற்காக முதியவரிடம் உள்ள 90 கிராம் தங்க நகைகள் மற்றும் 47,000 ரூபாயைத் திருடத் திட்டமிட்டு இந்த கொலையை அவர் செய்துள்ளார்.
தப்பியோடிவிடத் தனது அடையாளத்தை மறைக்க, ரூபேஷ் ஒரு சக ஊழியரின் இருசக்கர வாகனத்தைத் திருடி, அதன் எண்ணை மாற்றியமைத்து, புர்கா அணிந்து முகமூடி மற்றும் ஹெல்மெட் மூலம் மாறுவேடத்தில் சென்றார். இருப்பினும், சிசிடிவி காட்சிகள் மற்றும் டிஜிட்டல் தடயங்களை வைத்து போலீசார் அவரைத் துல்லியமாகக் கண்டுபிடித்தனர்.
போலீசார் பிடிபட்ட குற்றவாளியிடமிருந்து சுமார் 12 லட்சம் ரூபாய் மதிப்பிலான நகைகளை மீட்டனர். எஸ்பி எல். சுப்பராயுடு இந்தத் தகவலைத் தெரிவித்தார்.