டெல்லியின் கராலா கிராமத்திற்கு அருகில் டெல்லி போலீஸுக்கும் தில்லு தாஜ்புரியா கேங் உறுப்பினர்களுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை ஏற்பட்டது. இதில் சிக்கிய இரண்டு நபர்களுக்கு காலில் காயம் ஏற்பட்டது.
டெல்லி ரோஹினி மாவட்டத்தின் சிறப்புப் படை போலீசார், தில்லு தாஜ்புரியா கேங்கைச் சேர்ந்த ராகுல் மற்றும் விஷால் ஆகிய இருவரை என்கவுண்டரில் கைது செய்தனர். போலீசார் அவர்களை வழிமறித்தபோது, அவர்கள் துப்பாக்கியால் சுட்டதால் இரு தரப்பிலும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது.
இந்த மோதலில் மொத்தம் ஆறு ரவுண்டுகள் சுடப்பட்டன. காயமடைந்த இருவரும் தப்பித்துச் செல்ல முயன்றபோது காலில் சுடப்பட்டு பிடிபட்டனர். டெல்லியில் தில்லு மற்றும் கோகி கேங்கிற்கு இடையே நிலவி வரும் வன்முறைப் போட்டியை ஒடுக்க போலீசார் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.