குண்டூர் மாவட்டத்தில் நடந்த சாலை விபத்தில் விஜயவாடா போக்குவரத்து துணை ஆணையர் (DCP) ஷரீன் பேகத்தின் மகள் ஹபீசா பேகம் (24) உயிரிழந்தார். இந்த விபத்தில் அவரது நண்பரும் காயமடைந்துள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை குண்டூர் மாவட்டத்தில் ஏற்பட்ட சாலை விபத்தில் விஜயவாடா போக்குவரத்து துணை ஆணையர் (DCP) ஷரீன் பேகத்தின் மகள் ஹபீசா பேகம் (24) உயிரிழந்தார். இந்த விபத்தில் அவரது நண்பரும் காயமடைந்துள்ளார்.

ஹபீசா பேகம் மற்றும் அவரது நண்பர்கள் பயணம் செய்து வந்த கார், பின்னால் வந்த லாரியின் மீது மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டதாக குண்டூர் காவல் கண்காணிப்பாளர் வாகுல் ஜின்டல் தெரிவித்தார். நள்ளாபடு போலீசார் இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். காயமடைந்தவரின் நிலை தற்போது சீராக இருப்பதாக ஜின்டல் கூறினார்.

தனது மகளின் மரண செய்தியைக் கேட்ட ஷரீன் பேகம் அதிர்ச்சியடைந்து மயக்கமடைந்தார். அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.