நொய்டாவில் உள்ள ஒரு தங்குமிடத்தில் 19 வயது அசாம் பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. தனியார் வேலை தேடி அவர் ஒரு நபருடன் வந்த நிலையில், அந்த நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
நொய்டாவில் உள்ள ஒரு தங்குமிடத்தில் (PG) 19 வயது அசாம் பெண்ணின் உடல் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளது. தனியார் துறையில் வேலை தேடுவதற்காக அந்த பெண் ஒரு நபருடன் நொய்டாவிற்கு வந்திருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்தைப் பார்வையிட தடய அறிவியல் மற்றும் களப்பணி குழுவினர் அங்கு சென்று ஆய்வு செய்தனர். மரணத்திற்கான காரணத்தைக் கண்டறிய பெண்ணின் உடல் மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதோடு, அந்த நபரைத் தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.