சுதந்திர தின முன்னிட்டு பாதுகாப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்தும் நோக்கில், டெல்லி சாந்தினி சாக் பகுதியில் உள்ள சுமார் 300 கடைகளை ஆகஸ்ட் 12 முதல் 15 வரை மூடுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு செங்கோட்டை வெடிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
டெல்லி காவல்துறையின் தீவிர பாதுகாப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, சாந்தினி சாக் பகுதியில் உள்ள சுமார் 300 கடைகளை ஆகஸ்ட் 12 முதல் 15 வரை மூட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு செங்கோட்டையில் நடந்த வெடிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து, இந்த ஆண்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் வழக்கத்தை விட இரண்டு வாரங்களுக்கு முன்பே தொடங்கப்பட்டுள்ளன.
வணிகர்கள் இந்த திடீர் முடிவால் தங்கள் வணிகம் பாதிக்கப்படும் என்று கவலை தெரிவித்துள்ளனர். முந்தைய ஆண்டுகளில், சில நேரங்களில் கடைகள் இயங்க அனுமதிக்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு நான்கு நாட்களும் முழுமையாக மூடப்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. செங்கோட்டை மற்றும் சுதந்திர தின அணிவகுப்புப் பாதையில் கூடுதல் போலீஸ் படை மற்றும் ஆய்வுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
பாதுகாப்பை உறுதி செய்ய சுமார் 500 முக அங்கீகார கேமராக்கள் (Facial Recognition Cameras) மற்றும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும், மெட்ரோ நிலையங்கள், பேருந்து நிலையங்கள் மற்றும் விடுதிகளிலும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சுமார் 15,000 வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களின் பின்னணி சரிபார்ப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.