முதலீட்டாளர்களுக்கு அதிக வசதிகளை வழங்கும் வகையில் மாதிரி இருதரப்பு முதலீட்டு ஒப்பந்தத்தை (BIT) நிதி அமைச்சகம் மறுஆய்வு செய்து வருகிறது என்று பொருளாதார விவகாரங்கள் செயலாளர் அனுராதா தாக்கர் தெரிவித்துள்ளார்.
நிதி அமைச்சகம் தனது மாதிரி இருதரப்பு முதலீட்டு ஒப்பந்தத்தை (BIT) முதலீட்டாளர்களுக்கு சாதகமானதாக மாற்றுவதற்காக மறுஆய்வு செய்து வருகிறது என்றும், இதற்கான ஒப்புதலை விரைவில் அமைச்சரவையிடம் கோரப் போவதாகவும் பொருளாதார விவகாரங்கள் செயலாளர் அனுராதா தாக்கர் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
உலகளாவிய நடைமுறைகள் மற்றும் முந்தைய பேச்சுவார்த்தைகளின் அனுபவத்தின் அடிப்படையில் ஒப்பந்தத்தின் பல்வேறு விதிகள் மறுபரிசீலனை செய்யப்படுகின்றன என்று அவர் கூறினார். இந்திய நிறுவனங்கள் வெளிநாடுகளில் விரிவடைந்து வருவதால், அந்த நாடுகளில் அவர்களுக்குப் போதுமான பாதுகாப்பு கிடைப்பதை உறுதி செய்வது இந்த ஒப்பந்தத்தின் முக்கிய நோக்கமாகும்.