ஷாரிப் ஹாஷமியின் மனைவி நஸ்ரினுக்கு ஆறாவது முறையாக புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது நுரையீரல் மற்றும் சிறுநீரகத்திற்கு அருகில் பரவியுள்ளது.
நடிகர் ஷாரிப் ஹாஷ்மி தனது மனைவி நஸ்ரினின் புற்றுநோய் பாதிப்பு குறித்து நெகிழ்ச்சியான தகவல்களைப் பகிர்ந்துள்ளார். நஸ்ரினுக்கு ஆறாவது முறையாக புற்றுநோய் மீண்டும் ஏற்பட்டுள்ளது என்றும், அது தற்போது நுரையீரல் மற்றும் சிறுநீரகத்திற்கு அருகில் பரவியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். பல அறுவை சிகிச்சைகளுக்குப் பிறகு அவரது முகத்தில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
'தி ஃபேமிலி மேன்' தொடரின் மூலம் ஷாரிப் ஹாஷ்மி பெரும் வெற்றி பெற்ற அதே நேரத்தில், அவரது குடும்பம் இந்தத் துயரமான போராட்டத்தையும் எதிர்கொண்டது. நஸ்ரின் புகையிலை பழக்கம் இல்லாதவர் என்றாலும், அவர் வாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். பொருளாதார நெருக்கடியின் போது தனது நகைகளை விற்றதுடன், அவர்களின் வீட்டை விற்க வேண்டிய சூழலும் ஏற்பட்டது.
தனது மனைவியை ஒரு 'போராளி' என்று ஷாரிப் வர்ணிக்கிறார். இவ்வளவு போராட்டங்களுக்கு இடையிலும், நஸ்ரின் தனது குடும்பத்திற்குப் பெரும் பலமாகத் திகழ்கிறார் என்று அவர் கூறினார்.