பிரபல நகைச்சுவை கலைஞர் சமய் ரெய்னா அசாம் வெள்ள நிவாரண நிதிக்கு ரூ. 10 லட்சம் வழங்கியுள்ளார். முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா அவருக்குத் தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.
பிரபல நகைச்சுவை கலைஞர் சமய் ரெய்னா, அசாம் மாநிலம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ ரூ. 10 லட்சம் நிதியை வழங்க முன்வந்துள்ளார். இந்த அறிவிப்பு சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா, சமய் ரெய்னாவின் இந்த மனிதாபிமானச் செயலைப் பாராட்டி அவருக்குத் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார். அதே நேரத்தில், சமூக வலைதளப் பயனர்கள் நகைச்சுவை கலைஞர் மீதான எஃப்ஐஆர் (FIR) வழக்கை திரும்பப் பெற முதல்வர் கேட்டுக்கொண்டு வருகின்றனர்.