மோசமான வானிலை காரணமாகத் தற்காலிகமாக நிறுத்தப்பட்ட அமர்நாத் யாத்திரை தற்போது மீண்டும் தொடங்கியுள்ளது. இந்த யாத்திரை ஆகஸ்ட் 28 அன்று நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜம்மு மற்றும் காஷ்மீரில் தொடர்ச்சியான மழை மற்றும் மோசமான வானிலை காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த ஜூலை 19 அன்று யாத்திரை நிறுத்தப்பட்டது.

6 நாட்களுக்குப் பிறகு நிலைமை சீரடைந்ததைத் தொடர்ந்து, ஜம்மு முகாமிலிருந்து சுமார் 6,000 பக்தர்கள் தங்கள் பயணத்தைத் தொடங்கியுள்ளனர்.