வெப்பமடைந்து வரும் பூமியில் ஸ்கிசோஃப்ரினியா பாதிப்புள்ளவர்கள் பெரும் ஆபத்தை எதிர்கொள்கின்றனர். வெப்ப அலைகளின் போது இந்த நோயாளிகளுக்கு கூடுதல் பாதுகாப்பு தேவைப்படுகிறது.

வெப்ப அலைகளின் போது, ஸ்கிசோஃப்ரினியா பாதிப்புள்ளவர்கள் மற்ற மருத்துவப் பாதிப்புகளைக் கொண்டிருப்பவர்களை விட மிக அதிக ஆபத்தை எதிர்கொள்கின்றனர். உலக வெப்பமயமாதல் காரணமாக, இந்த நோயாளிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது.

இந்த மனநல பாதிப்பு உடல் வெப்பநிலையைச் சீராக வைத்திருக்கப் போராடும் திறனைப் பாதிக்கலாம். இதனால் கடுமையான வெப்பத்தின் போது உயிரிழப்பு ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது.