வைஷ்யா டெக்ரி சுமார் 90 ஆண்டுகளாக ஒரு சாதாரணக் குன்றாகவே இருந்தது. ஆனால், அங்கு ஒரு பிரம்மாண்டமான புத்த மதம் தொடர்பான ரகசியம் இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

உஜ்ஜயினியில் உள்ள வைஷ்யா டெக்ரி பகுதியில் ஒரு பிரம்மாண்டமான புத்த ஸ்தூபி இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. இந்த ஸ்தூபியின் விட்டம் சுமார் 350 அடி மற்றும் உயரம் குறைந்தபட்சம் 100 அடி இருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

இதனுடன் ஒப்பிடும்போது, சாஞ்சியில் உள்ள புகழ்பெற்ற மகா ஸ்தூபியின் விட்டம் சுமார் 120 அடி மற்றும் உயரம் 54 அடி மட்டுமேயாகும். இந்தத் தரவுகள் உஜ்ஜயினியின் இந்தத் தளம் சாஞ்சியை விடப் பெரியது என்பதைக் காட்டுகிறது.