ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையிலான போரில் ஒரு விசித்திரமான முரண்பாடு காணப்படுகிறது. போரைத் தூண்டிய இஸ்ரேல், போரின் நேரடித் தாக்கங்களிலிருந்தும் பொருளாதார இழைகளிலிருந்தும் தப்பித்து லாபம் ஈட்டும் நிலையில் உள்ளது.

கடந்த ஐந்து மாதப் போரை ஆய்வு செய்ததில், இந்தப் போரைத் தொடங்கிய இஸ்ரேல், போரின் பாதிப்புகளிலிருந்து மிகக் குறைந்த அளவே பாதிக்கப்பட்டுள்ளது என்பது தெரியவருகிறது. ஈரானிய ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் வளைகுடா நாடுகளின் உள்கட்டமைப்பைத் தாக்கும்போது, டெல் அவிவ் பங்குச் சந்தை புதிய உச்சங்களைத் தொடுகிறது மற்றும் இஸ்ரேலின் பாதுகாப்புத் தொழில்துறை முன்னெப்போதும் இல்லாத லாபத்தைப் பதிவு செய்கிறது.

ஈரான் பல தசாப்தங்களாகக் கட்டியெழுப்பிய ஹிஸ்புல்லா மற்றும் ஹூதி போன்ற proxy அமைப்புகளின் பாதுகாப்பு வலையமைப்பு தற்போது சிதைந்து வருகிறது. ஈரான் நேரடியாக இஸ்ரேலையோ அல்லது அமெரிக்காவையோ தாக்கிப் பெரும் போரைத் தவிர்க்க முயல்கிறது; மாறாக, வளைகுடா நாடுகளின் உள்கட்டமைப்பைத் தாக்கி அமெரிக்காவை அழுத்த முயற்சிக்கிறது. இதனால் இஸ்ரேலின் உள்நாட்டுப் பாதுகாப்பு மற்றும் பொருளாதாரம் பாதிக்கப்படாமல் உள்ளது.

பொருளாதார ரீதியாக இஸ்ரேல் பெரும் வளர்ச்சியைச் சந்தித்து வருகிறது. இஸ்ரேலிய ஷெக்கல் அமெரிக்க டாலருக்கு எதிராக வலுவடைந்துள்ளதுடன், பாதுகாப்புத் துறை ஏற்றுமதியும் முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிகரித்துள்ளது. உலக முதலீட்டாளர்கள் இந்தப் போரை இஸ்ரேலுக்கு சாதகமான ஒரு வாய்ப்பாகவே பார்க்கின்றனர்.