நியூயார்க்கின் அப்ஸ்டேட் பகுதியில் நடந்த ஒரு கவுண்டி திருவிழாவில் சர்க்கஸ் நிகழ்ச்சி நடத்திக் கொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டது. ஒரு கலைஞரின் குறி தவறானதால் மற்றொரு கலைஞரின் கழுத்தில் அம்பு பாய்ந்தது.

நியூயார்க்கிற்கு வடமேற்கே உள்ள மிட்ல்டவுனில் உள்ள ஆரஞ்சு கவுண்டி திருவிழாவில் வெள்ளிக்கிழமை இரவு இந்த விபத்து நடந்தது. விஸ்கான்சினைச் சேர்ந்த 42 வயதான அனா டாசா டாவெரா மற்றும் 38 வயதான எட்வின் குவெர்வோ ரேஞ்சல் ஆகியோர் தங்கள் கிராஸ்போ ஷூட்டிங் நிகழ்ச்சியைச் செய்து கொண்டிருந்தனர். அப்போது எட்வின் ஒரு நுரை இலக்கை (foam target) பிடித்துக் கொண்டிருந்தபோது, அனா தெரியாமல் அவர் கழுத்தில் அம்பைச் செலுத்தினார்.

பாதிக்கப்பட்ட எட்வின் ரேஞ்சல் உடனடியாக ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அதிர்ஷ்டவசமாக, அம்பு கழுத்தின் மென்மையான திசுப் பகுதியில் பட்டதால் பெரிய இரத்தக் கசிவு ஏற்படவில்லை என்று சர்க்கஸ் நிர்வாகி பெஞ்சமின் ஜாக்சன் தெரிவித்தார். சனிக்கிழமை அம்பு அகற்றப்பட்டு தையல் போடப்பட்ட பிறகு அவர் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.