அமெரிக்கா ஜே-1 விசா விதிகளில் கடுமையான கட்டுப்பாடுகளை அமல்படுத்த முன்வந்துள்ளது. இதனால் இந்திய ஆராய்ச்சியாளர்கள், மருத்துவர்கள் மற்றும் மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.
அமெரிக்க நிர்வாகம் ஜே-1 விசா திட்டத்திற்கு மிகவும் கடுமையான விதிமுறைகளை கொண்டு வர திட்டமிட்டுள்ளது. இந்த புதிய மாற்றங்கள் இந்தியத் தொழில் வல்லுநர்கள் அமெரிக்காவிற்குள் நுழைவதைத் கடினமாக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தவறான தகவல்களை அளிக்கும் வெளிநாட்டுப் பரிமாற்ற மாணவர்கள் உடனடியாக விசா ரத்து செய்யப்படலாம் என்ற விதி முன்மொழியப்பட்டுள்ளது. விசா நீட்டிப்பு மற்றும் ரத்து செய்வதில் அதிகப்படியான கண்காணிப்பை உறுதி செய்வதே இதன் முக்கிய நோக்கமாகும்.