மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், அமெரிக்கா எந்தவொரு 'துணிச்சலான நடவடிக்கையும்' எடுக்க வேண்டாம் என்று ஈரான் எச்சரித்துள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈரான் மீது கூடுதல் தாக்குதல்களை நடத்த மிரட்டியுள்ளார்.
மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், அமெரிக்கா எந்தவொரு 'துணிச்சலான நடவடிக்கையும்' எடுக்க வேண்டாம் என்று ஈரான் எச்சரித்துள்ளது. ஹார்முஸ் நீரிணைப்பை மீண்டும் திறக்க வாஷிங்டன் அழுத்தம் கொடுத்து வரும் நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈரான் மீது மேலும் தாக்குதல்களை நடத்த மிரட்டியுள்ளார்.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தங்கள் நிலப்பரப்பைப் பயன்படுத்தி ஈரான் மீது தாக்குதல் நடத்த அனுமதிக்க வேண்டாம் என்று வளைகுடா நாடுகளுக்கு ஈரான் எச்சரித்துள்ளது. இது ஒரு சட்டரீதியான மற்றும் தார்மீகக் கடமை என்றும், ஈரான் தனது தற்காப்பு உரிமையை பயன்படுத்தும் என்றும் அந்நாட்டின் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.