இந்தோனேசியாவின் மதுரா தீவு அருகே ஒரு ஃபெரி படகில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர் மற்றும் 41 பேர் காணாமல் போயுள்ளனர்.
இந்தோனேசியாவின் மதுரா தீவு அருகே சென்றுகொண்டிருந்த ஒரு ஃபெரி படகில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. அந்தப் படகில் மொத்தம் 271 பயணிகள் இருந்தனர். தீப்பற்றி எரிந்த படகிலிருந்து உயிர் பிழைப்பதற்காகப் பயணிகள் கடலில் குதித்தனர்.
இந்த விபத்தில் இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 41 பேர் காணாமல் போயுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.