ஈரான் மற்றும் ஓமன் இடையிலான பேச்சுவார்த்தையின் மூலம் ஹார்முஸ் நீரிவெளியை மீண்டும் திறப்பதற்கான ஒப்பந்தம் இந்த வாரம் அறிவிக்கப்படலாம் என்று டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். இது உலகப் பொருளாதாரத்தையும் எரிபொருள் விலையையும் பாதிக்கக்கூடும்.

ஹார்முஸ் நீரிவெளியை மீண்டும் திறப்பதற்கான ஒப்பந்தம் இந்த வாரத்திற்குள் அறிவிக்கப்படலாம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். ஈரான் மற்றும் ஓமன் ஒரு வரைவு ஒப்பந்தத்தை இறுதி செய்துள்ள நிலையில், இந்த நடவடிக்கை கப்பல் போக்குவரத்தை மீண்டும் தொடங்கவும், உலகளாவிய எண்ணெய் விலையைக் குறைக்கவும் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

போரினால் இந்த நீரிவெழி முடங்கியுள்ளதால், உலகளவில் எரிபொருள் மற்றும் அடிப்படைப் பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. ஈரான் இந்த நீரிவெளியின் மீது முழு அதிகாரத்தைப் பெறுவதை அமெரிக்கா எதிர்க்கிறது. புதிய ஒப்பந்தத்தின்படி, கப்பல்கள் ஈரானியக் கட்டுப்பாட்டுப் பாதையில் நுழைந்து, ஓமன் கட்டுப்பாட்டுப் பாதையில் வெளியேறும் என்று கூறப்படுகிறது.

இருப்பினும், இந்தச் சூழலிலும் மத்திய கிழக்கில் பதற்றம் குறையவில்லை. ஏமன் ஹூதி கிளர்ச்சியாளர்கள் செங்கடலில் சவூதி எண்ணெய் டேங்கர் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதாகக் கூறியுள்ளனர். மேலும், இஸ்ரேல் மற்றும் ஹிஸ்புல்லா இடையிலான போர்நிறுத்த ஒப்பந்தம் மீறப்படுவதால் லெபனான் எல்லைப் பகுதிகளில் மோதல்கள் நீடிக்கின்றன.