லெபனானின் தெற்குப் பகுதிகளில் இஸ்ரேல் மேற்கொண்டு வரும் ஆக்கிரமிப்பு மற்றும் வீடுகளைத் தகர்க்கும் நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று ஐநா மனித உரிமைகள் தலைவர் வோல்கர் டியர்க் தெரிவித்துள்ளார்.
லெபனான் மற்றும் இஸ்ரேல் அதிகாரிகளுக்கு இடையிலான நேரடி பேச்சுவார்த்தைக்கு சில நாட்களுக்கு முன்னதாக, ஐநா மனித உரிமைகள் தலைவர் வோல்கர் டியர்க் இந்த முக்கிய கருத்தை முன்வைத்துள்ளார். லெபனான் பயணத்தை நிறைவு செய்த அவர், குடிமக்களின் வீடுகள் பெருமளவில் அழிக்கப்படுவது சர்வதேச மனிதாபிமான சட்டங்களை மீறும் செயல் என்று கூறினார்.
இஸ்ரேல் தனது தாக்குதல்கள் ஹிஸ்புல்லா அமைப்பைக் குறிவைப்பதாகக் கூறினாலும், லெபனானில் இந்த மோதலால் 4,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 12 லட்சம் பேர் இடம்பெயர்ந்துள்ளனர். இஸ்ரேலின் இந்த நடவடிக்கைகள் போர்க்குற்றங்களாக மாறக்கூடும் என்று அவர் எச்சரித்துள்ளார்.