ஜாவா தீவின் அருகே இந்தோனேசியாவின் படகில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 41 பேர் காணாமல் போயுள்ளனர். மீட்புப் படையினர் 225 பேரை பத்திரமாக மீட்டனர்.
இந்தோனேசியாவின் ஜாவா தீவிற்கு அருகே ஞாயிற்றுக்கிழமை காலை முதியாரா சென்டோசா 2 என்ற படகில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. அந்தப் படகில் மொத்தம் 271 பயணிகள் மற்றும் ஊழியர்கள் இருந்தனர். இந்த விபத்தில் குறைந்தது ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 41 பேர் இன்னும் காணவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சுரபாயாவிலிருந்து மகாசருக்குச் சென்ற இப் படகில் தீப்பிடித்ததை அடுத்து, மீட்புக் குழுவினர் மற்றும் அருகிலுள்ள கப்பல்கள் இணைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டன. இதுவரை 225 பேரை மீட்புப் படையினர் பத்திரமாக மீட்டனர். இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.