அமெரிக்காவின் தாக்குதல் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் ஈரான் தனது பிராந்திய ராஜதந்திர நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. ஒவ்வொரு அச்சுறுத்தலையும் தங்களுக்கு விடுக்கப்பட்ட உண்மையான மற்றும் குறிப்பிடத்தக்க சவாலாக கருதுவதாக ஈரானிய பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தெஹ்ரான் தனது அண்டை நாடுகளுடன் தீவிர பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது. ஈரானின் எரிசக்தி தளங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தக்கூடும் என்ற அச்சுறுத்தலுக்கு மத்தியில், இது "போரின் தீப்பிழம்புகளை" உருவாக்கும் என்று ஈரான் எச்சரித்துள்ளது.
ஈரானிய பாதுகாப்பு அமைச்சர், நாட்டின் மீதான எந்தவொரு அச்சுறுத்தலையும் வெறும் பயமுறுத்தல் என்று கடந்துவிடாமல், அதை மிகவும் தீவிரமாக அணுகுவதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், பாகிஸ்தான் மற்றும் துருக்கி ஆகிய நாடுகளுடன் நடத்திய பேச்சுவார்த்தையில், அமெரிக்காவின் அடுத்தகட்ட தாக்குதல்களுக்கு எதிராக ஈரான் கடுமையான எச்சரிக்கைகளை விடுத்துள்ளது.