கடல் வழி வர்த்தக பாதைகளின் மீதான சார்புநிலையை குறைக்க, இந்தியா மற்றும் ரஷ்யாவை இணைக்கும் ரயில் பாதை திட்டத்தை மாஸ்கோ முன்மொழிந்துள்ளது.

இந்தியா மற்றும் ரஷ்யாவிற்கு இடையே ஒரு புதிய ரயில் வழித்தடத்தை உருவாக்குவதற்கான திட்டத்தை மாஸ்கோ முன்மொழிந்துள்ளது. இந்தத் திட்டம் நடைமுறைக்கு சாத்தியமானது என்று ரஷ்யா தெரிவித்துள்ளது.

முக்கியமான கடல் வழிப் பாதைகளில் ஏற்படும் அரசியல் மற்றும் பாதுகாப்பு சவால்களைத் தவிர்க்கவே இந்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. எரிசக்தி நெருக்கடி மற்றும் உலகளாவிய வர்த்தக மாற்றங்களுக்கு மத்தியில், இந்தியாவுடன் வலுவான நிலவழி இணைப்பை ஏற்படுத்த ரஷ்யா விரும்புகிறது.