அமைதி பேச்சுவார்த்தை அழுத்தங்களுக்கு மத்தியில், வடக்கு காசாவில் ஹமாஸ் தளபியை குறிவைத்து இஸ்ரேலிய ராணுவம் ட்ரோன் தாக்குதலை நடத்தியுள்ளது.

இஸ்ரேலிய ராணுவம் புதன்கிழமை வடக்கு காசாவின் பெட் லஹியாவில் ஹமாஸ் தளபதி என்று சொல்லப்படும் ஒரு நபரை இலக்கு வைத்து துல்லியமான ட்ரோன் தாக்குதலை நடத்தியது. ஆகஸ்ட் 3-க்குப் பிறகு இஸ்ரேல் நடத்திய இத்தகைய தாக்குதல் இதுவேயாகும். இருப்பினும், அந்த நபர் கொல்லப்பட்டாரா என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவலை இஸ்ரேல் இன்னும் வெளியிடவில்லை.

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் காசாவில் அமைதி முயற்சிகளை முன்னெடுக்க அழைப்பு விடுத்த நிலையிலும் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதற்கிடையில், கொலம்பியா கோலான் ஹைட்ஸ் பகுதியில் இஸ்ரேலின் இறையாண்மையை அங்கீகரித்ததை துருக்கி கடுமையாக விமர்சித்துள்ளது.