பல தசாப்தங்களில் பாகிஸ்தான் தனது ராணுவ கட்டமைப்பில் மிகப்பெரிய மாற்றத்தை மேற்கொண்டுள்ளது. லெப்டினன்ட் ஜெனரல் ஆமிர் ரசா புதிய தேசிய மூலோபாய கட்டளை அமைப்பின் முதல் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

பாகிஸ்தான் தனது ராணுவ அமைப்பில் பல தசாப்தங்களில் இல்லாத மிகப்பெரிய மறுசீரமைப்பை மேற்கொண்டுள்ளது. இந்த புதிய மாற்றத்தின் மூலம் நாட்டின் அணுக்கரு ஆயுதக் கிடங்குகள் தேசிய மூலோபாய கட்டளை (NSC) அமைப்பின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன.

லெப்டினன்ட் ஜெனரல் ஆமிர் ரசா 4-ஸ்டார் ராங்கிக்கு பதவி உயர்வு பெற்று, இந்த புதிய அமைப்பின் முதல் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் அணுக்கரு சொத்துக்களின் கண்காணிப்பு நேரடியாக ஜெனரல் அசிம் முனீர் தலைமையின் கீழ் வரும்.