PoK பகுதியில் போராட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா ஆசிப் சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார். போராட்டக்காரர்களை இந்தியாவுக்கு இணையான எதிரிகள் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

वीडियो लोड हो रहा है...

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் (PoK) தொடர்ச்சியாக நடைபெற்று வரும் போராட்டங்களுக்கு மத்தியில், பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா ஆசிப் சர்ச்சைக்குரிய கருத்தைத் தெரிவித்துள்ளார். இஸ்லாமாத்திற்கு எதிராக வீதியில் இறங்கும் போராட்டக்காரர்களை இந்தியாவுக்கு இணையான எதிரிகளாகவே கருதுவதாக அவர் கூறியுள்ளார். போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்பில்லை என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

சமீபத்தில் ஜாயிண்ட் ஆமி ஆக்ஷன் கமிட்டியின் (JAAC) தலைமையில் நடைபெற்ற பேரணியின் போது பாதுகாப்புப் படையினரின் துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது 14 போராட்டக்காரர்கள் உயிரிழந்தனர். போராட்டக்காரர்கள் அமைதியான முறையில் அணிவகுத்து வந்தபோது பாகிஸ்தான் ராணுவம் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தியதாக அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இருப்பினும், போராட்டக்காரர்கள் ஆயுதங்களுடன் தாக்குதல் நடத்தியதாக பாகிஸ்தான் அதிகாரிகள் கூறுகின்றனர்.

ஜூன் மாதம் முதல் தொடரும் இந்த போராட்டங்களில் இதுவரை 80-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. PoK-ல் பாகிஸ்தான் நடத்தத் திட்டமிட்டுள்ள தேர்தலை, அந்தப் பகுதியில் நடக்கும் மனித உரிமை மீறல்களை மறைப்பதற்கான ஒரு நாடகம் என்று இந்தியா விமர்சித்துள்ளது.