சுற்றுச்சூழல் நிலைத்தன்மை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த 66,928 மருத்துவர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் இணைந்து ஹிமாலய நிறுவனத்திற்கு கின்னஸ் உலக சாதனையைப் பெற்றுத் தந்துள்ளனர்.

மருத்துவர்கள் தினமான ஜூலை 1, 2026 அன்று தொடங்கப்பட்ட மரக்கன்று நடும் முயற்சியின் ஒரு பகுதியாக, இந்தியா முழுவதும் உள்ள 66,928 சுகாதாரப் பணியாளர்கள் இந்த சாதனையில் பங்கேற்றனர். "நலனுக்காக ஒன்றிணைவோம், பசுமையான நாளைக்காக ஒன்றிணைவோம்" என்ற வாசகத்துடன் புகைப்படங்களை சமர்ப்பித்ததன் மூலம், மிகப்பெரிய ஆன்லைன் புகைப்பட ஆல்பம் என்ற கின்னஸ் உலக சாதனையினை ஹிமாலய நிறுவனம் வென்றுள்ளது.

காலநிலை மாற்றம் மற்றும் பொது சுகாதாரத்திற்கு இடையிலான தொடர்பை வலியுறுத்த இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது. 2030 ஆம் ஆண்டுக்குள் குறைந்தபட்சம் 5 மில்லியன் மரங்களை நடுவதை ஹிமாலய நிறுவனம் இலக்காகக் கொண்டுள்ளது. இதுவரை 2 மில்லியனுக்கும் அதிகமான மரங்கள் நடப்பட்டு, பல்லுயிர் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளித்து வருகிறது.