மேற்கு வங்க சட்டப்பேரவை பஞ்சாயத்துத் தலைவர்களின் நிதி அதிகாரத்தைக் குறைக்கும் மசோதாவை நிறைவேற்றியுள்ளது. 169 உறுப்பினர்கள் ஆதரவாகவும், 13 உறுப்பினர்கள் எதிராகவும் வாக்களித்தனர்.

மேற்கு வங்க சட்டப்பேரவை சனிக்கிழமை 'மேற்கு வங்க பஞ்சாயத்து (இரண்டாவது திருத்த) மசோதா, 2026'-ஐ நிறைவேற்றியது. இந்த புதிய சட்டத்தின் மூலம் பஞ்சாயத்துத் தலைவர்களின் நிதி அதிகாரங்கள் கட்டுப்படுத்தப்படுகின்றன. நிர்வாகத் நிலைத்தன்மை மற்றும் கிராமப்புற உள்ளூர் அமைப்புகளின் சீரான செயல்பாட்டை உறுதி செய்வதே இதன் முக்கிய நோக்கமாகும்.

பஞ்சாயத்துத் தலைவர்கள் மற்றும் துணைத் தலைவர்கள் 15 நாட்களுக்கு மேல் வராத பட்சத்தில், ஒரு நிர்வாகியை நியமிக்க இந்த மசோதா வழிவகை செய்கிறது. ஊழல் மற்றும் முறைகேடுகளைக் கட்டுப்படுத்துவதே இந்த மாற்றத்தின் நோக்கம் என்று பஞ்சாயத்துத் துறை அமைச்சர் திலீப் கோஷ் தெரிவித்துள்ளார். இனி பஞ்சாயத்துத் தலைவர்கள் முன்மொழிவுகளை மட்டுமே அங்கீகரிப்பார்கள், ஆனால் இறுதி ஒப்புதல் அதிகாரிகளை (Bureaucrats) பொறுத்தே அமையும்.