பிஜு ஜனதா தளம் ஆட்சிக் காலத்தில் முதலமைச்சரின் அலுவலகத்திலிருந்து காணாமல் போன விசாரணை ஆணைய அறிக்கையை விசாரிக்கும் பொறுப்பு குற்றப்பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. முதல்வர் மோகன் சரண் மஜி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
ஒடிசா முதல்வர் மோகன் சரண் மஜி திங்களன்று ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். பிஜு ஜனதா தளம் ஆட்சிக் காலத்தில் முதலமைச்சரின் அலுவலகத்திலிருந்து (CMO) காணாமல் போன விசாரணை ஆணைய அறிக்கையை விசாரிக்கும் பொறுப்பை குற்றப்பிரிவிடம் ஒப்படைத்துள்ளார். சுவாமி லட்சுமணானந்த சரஸ்வதி கொலை வழக்கு தொடர்பான ஏ.எஸ். நாயுடு ஆணையத்தின் அறிக்கை காணாமல் போனது குறித்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
2008 ஆம் ஆண்டு சுவாமி லட்சுமணானந்த சரஸ்வதி மற்றும் பலரின் கொலை, காந்தமால் மாவட்டத்தில் இந்து மற்றும் கிறிஸ்தவர்களுக்கு இடையே பெரும் வகுப்புத் வன்முறையைத் தூண்டியது. இந்த வழக்கில் முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக் அவர்களின் நெருங்கிய உதவியாளர் வி. கார்த்திகேயா பாண்டியன் உள்ளிட்ட பலரை காவல்துறை விசாரணைக்காக அழைத்துச் சென்றது குறிப்பிடத்தக்கது.