ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுக்கு எதிராக காவல்துறை வன்முறையில் ஈடுபட்டதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். பெல்லட் கன் மற்றும் முள் தடிகளால் மாணவர்கள் தாக்கப்படுபதாக அவர் தெரிவித்துள்ளார்.

वीडियो लोड हो रहा है...

ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுக்கு எதிராக காவல்துறை நடத்திய வன்முறை குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். புதன்கிழமை செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், ஐந்து புகைப்படங்களை காண்பித்து, நாடாளுமன்றத்திலிருந்து வெறும் 500 மீட்டர் தொலைவில் மாணவர்கள் தாக்கப்பட்டதாகக் கூறினார்.

பெல்லட் கன் மூலம் சுடப்பட்டதில் ஒரு மாணவரின் கண் பார்வை பறிபோகும் அபாயம் உள்ளதாக அவர் தெரிவித்தார். மேலும், காவல்துறை பெண்கள் மற்றும் சிறுவர்கள் மீதும் முள் தடி மற்றும் மின் அதிர்ச்சி தடிகளால் தாக்கியதாகக் குற்றம் சாட்டிய அவர், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இந்த நடவடிக்கைக்குத் தூண்டுகோலாக இருந்ததாகக் கூறினார்.