வாஷிங்டனில் டிரம்பின் மெரின் ஒன் ஹெலிகாப்டர் பறந்து கொண்டிருந்தபோது, ஒரு பயணிகள் விமானம் மிக அருகில் பறந்து வந்ததால் பாதுகாப்பு சம்பவம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து FAA விசாரணை நடத்தி வருகிறது.
அமெரிக்காவின் ஃபெடரல் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் (FAA), வாஷிங்டனில் மெரின் ஒன் ஹெலிகாப்டர் தொடர்பான பாதுகாப்பு குறைபாடு குறித்து விசாரணை நடத்தி வருகிறது. அதிபர் டிரம்ப் ஹெலிகாப்டரில் இருந்தபோது, ஒரு பயணிகள் விமானம் மிக அருகில் பறந்து வந்ததால் இந்தச் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
விமானம் ஏன் takeoff செய்ய அனுமதிக்கப்பட்டது மற்றும் இந்த விமான போக்குவரத்து பாதுகாப்புத் தவறு எவ்வாறு நடந்தது என்பதை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். இந்தச் சம்பவம் விமானப் போக்குவரத்து பாதுகாப்பில் பெரும் கேள்வி எழுப்பியுள்ளது.