வேலைவாய்ப்பு இல்லாத காரணத்தால் மக்கள் இடம்பெயர்ந்தால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பொறுப்பாவார்கள் என்று ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் ஈஸ்வர் காந்த்ரே தெரிவித்துள்ளார்.

பெல்லாரி மாவட்டத்தில் தகுதியுள்ள தொழிலாளர்களுக்கு உள்ளூர் அளவில் வேலைவாய்ப்பை உறுதி செய்யவும், வறுமையினால் ஏற்படும் இடப்பெயர்ச்சியைக் தடுக்கவும் VB-G RAM G திட்டத்தை முறையாக செயல்படுத்த உத்தரவிட்டுள்ளார் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் ஈஸ்வர் பி. காந்த்ரே. போதிய மழையின்மை விவசாயத்தைப் பாதித்துள்ளதால், மக்கள் வேலை தேடி நகரங்களுக்குச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளதைக் குறிப்பிட்டு அவர் இதனைத் தெரிவித்தார்.

ஜூன் மாதம் வரையிலான இலக்கை பெல்லாரி மாவட்டம் அடைந்த விதம் குறித்து அதிருப்தி தெரிவித்த அமைச்சர், ஒவ்வொரு மாதமும் குறைந்தது ஐந்து முதல் ஆறு லட்சம் மனித நாட்களுக்கான வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். வேலைவாய்ப்பு இல்லாததால் மக்கள் இடம்பெயர்ந்தால், சம்பந்தப்பட்ட நிர்வாக அதிகாரி மற்றும் பஞ்சாயத்து வளர்ச்சி அலுவலர் ஆகியோரே அதற்குப் பொறுப்பாவார்கள் என்றும் அவர் எச்சரித்தார்.

மேலும், தூய்மையான குடிநீர் வழங்குதல் மற்றும் ஜல் ஜீவன் மிஷன் பணிகளால் சேதமடைந்த சாலைகளை உடனடியாகச் சீரமைத்தல் ஆகியவற்றையும் அவர் வலியுறுத்தினார். இ-ஸ்வத்து ஆவணங்களை குடிமக்களின் இல்லங்களுக்கே கொண்டு சேர்க்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.