உலகக் கோப்பையை நிர்வகிக்க 20 பில்லியன் டாலர் மதிப்பிலான துணை நிறுவனத்தை உருவாக்க ஃபிஃபா கொண்டுள்ள திட்டத்தை முன்னாள் தலைவர் செப் பிளாட்டர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

ஃபிஃபாவின் முன்னாள் தலைவர் செப் பிளாட்டர், உலகக் கோப்பையை நிர்வகிக்க ஒரு துணை நிறுவனத்தை உருவாக்கி, அதில் 20% பங்குகளை வெளி முதலீட்டாளர்களுக்கு விற்பனை செய்யும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். கால்பந்து என்பது ஒரு சில நிர்வாகிகளின் வணிக சொத்து அல்ல என்று அவர் கூறினார்.

புதன்கிழமை ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் பேசிய பிளாட்டர், கால்பந்து என்பது தனிநபருக்கோ அல்லது நிறுவனத்திற்கோ சொந்தமானது அல்ல, அது மக்களுக்கே சொந்தமானது என்று கூறினார். ஃபிஃபா ஒரு லாப நோக்கம் கொண்ட கார்ப்பரேட் அமைப்பாக மாறினால், அது தனது ஆன்மாவை இழந்துவிடும் என்றும் அவர் எச்சரித்தார். இந்த முடிவுக்கு யூஎஃபா உள்ளிட்ட ஐரோப்பிய கால்பந்து அமைப்புகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.