இங்கிலாந்தின் ஒரு கிராமப்புற கிரிக்கெட் போட்டியில், பந்து விளிம்பில் பட்ட சத்தத்தை விரல் சொடுக்கு மூலம் போலியாக உருவாக்கிய வீரர் சிக்கியுள்ளார். இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து அவர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இங்கிலாந்தின் ஒரு கிராமப்புற கிரிக்கெட் போட்டியில், ஒரு வீரர் பந்து பேட்டின் விளிம்பில் பட்டது போன்ற சத்தத்தை உருவாக்க விரலைச் சொடுக்கியது கேமராவில் பதிவாகியுள்ளது. இதன் மூலம் நடுவரை ஏமாற்றி பேட்டரை அவுட் செய்ய அவர் முயன்றார்.

இந்தச் சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட கிளப் இது குறித்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த ஒழுக்கமற்றச் செயலால் அந்த வீரர் தற்போது அணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.