உலகக் கோப்பை மற்றும் பிற ஃபிஃபா போட்டிகளில் தனியார் முதலீட்டாளர்களுக்கு உரிமைகளை மாற்றும் ஃபிஃபாவின் திட்டத்தை யுஇஎஃப்ஏ ஒருமனதாக நிராகரித்துள்ளது. இந்தத் திட்டம் நடைமுறைக்கு வந்தால் உலகக் கோப்பையை புறக்கணிப்பதாக யுஇஎஃப்ஏ தெரிவித்துள்ளது.

ஃபிஃபாவின் முக்கிய போட்டிகளில் பங்குகளைத் தனியார் முதலீட்டாளர்களுக்கு விற்கும் திட்டத்தை முன்னெடுத்தால், உலகக் கோப்பையை புறக்கணிப்பதாக யுஇஎஃப்ஏவின் 55 உறுப்பு சங்கங்கள் வாக்களித்துள்ளன. ஃபிஃபா தலைவர் ஜியானி இன்ஃபான்டினோ முன்வைத்த இந்த சர்ச்சைக்குரிய திட்டம், ஆண்கள் மற்றும் பெண்கள் உலகக் கோப்பை மற்றும் கிளப் உலகக் கோப்பையையும் உள்ளடக்கியது.

யுஇஎஃப்ஏ வெளியிட்டுள்ள அறிக்கையில், உலகக் கோப்பை என்பது ஒரு முதலீட்டுத் தயாரிப்பு அல்ல என்றும், அது கால்பந்தாட்டத்தின் மிகச்சிறந்த விளையாட்டு பாரம்பரியம் என்றும் தெரிவித்துள்ளது. கால்பந்தாட்டத்தின் எதிர்காலம் நிதி லாபத்திற்காக பணயம் வைக்கப்படக்கூடாது என்றும், முதலீட்டாளர்களின் லாபத்திற்காக கால்பந்தாட்டத்தின் நலன்கள் அடகு வைக்கப்படக்கூடாது என்றும் உறுதியாகக் கூறியுள்ளது.