ஆகஸ்ட் 17 முதல் 23 வரை புது தில்லியில் நடைபெறவுள்ள பிஎடபிள்யூஎஃப் உலக சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய வீரர்கள் முக்கிய இடங்களைப் பிடித்துள்ளனர். சாத்விக்-சிராக் ஜோடி ஐந்தாவது இடத்தையும், பிவி சிந்து ஒன்பதாவது இடத்தையும் பிடித்துள்ளனர்.
ஆகஸ்ட் 17 முதல் 23 வரை புது தில்லியில் உள்ள இந்திரா காந்தி ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ள பிஎடபிள்யூஎஃப் உலக சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய வீரர்கள் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளனர். கடந்த ஆண்டு வெண்கலப் பதக்கம் வென்ற ஆர். சாத்விக்-சிராக் ஜோடி, ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளனர், இது இந்திய வீரர்களுள் மிக உயர்ந்ததாகும்.
ஐந்து முறை பதக்கம் வென்ற பிவி சிந்து, உலக அளவில் ஒன்பதாவது இடத்தில் இருப்பதால் ஒன்பதாவது சீட் பெற்றுள்ளார். முன்னாள் வெண்கலப் பதக்க வெற்றியாளர் லக்ஷ்யா சென் 14 மற்றும் துருவ் கபிலா - தனிஷா கிராஸ்டோ ஜோடி 15-வது சீட் பெற்றுள்ளனர். சீனாவின் ஷி யுக்கி மற்றும் தென்கொரியாவின் ஆன் சே யங் ஆகியோர் முதன்மை சீடுகளாக உள்ளனர்.