முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் நிகழ்வில் பங்கேற்றதையடுத்து, முன்னாள் வங்கதேச கிரிக்கெட் கேப்டன் சாகிப் அல் ஹசானின் இல்லத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
பதவி நீக்கப்பட்ட முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் முதல் பொது ஊடக சந்திப்பில் பங்கேற்ற சில மணிநேரங்களிலேயே, முன்னாள் வங்கதேச கேப்டன் சாகிப் அல் ஹசானின் பூர்வீக வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. புதன்கிழமை மகுரா நகரில் உள்ள அவரது வீட்டில் ஒரு கும்பல் ஜன்னல்களை உடைத்து பெட்ரோல் குண்டுகளை வீசியது, இதனால் வீட்டின் மேல் தளத்தில் தீ விபத்து ஏற்பட்டது.
இந்தத் தாக்குதலின் போது வீடு காலியாக இருந்ததால் உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை என்று காவல்துறை தெரிவித்துள்ளது. சாகிப் அல் ஹசன் 2024 மாணவர் போராட்டத்திற்குப் பிறகு வங்கதேசத்திற்கு வெளியே இருந்து வருகிறார் மற்றும் அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் விசாரணைக்கு உட்பட்ட உள்ளன.
டெல்லியில் நடந்த ஒரு நிகழ்வில் ஹசீனா மீண்டும் வங்கதேசத்திற்குத் திரும்புவதாகக் கூறியுள்ளார். இது வங்கதேசத்தின் இறையாண்மையை அவமதிக்கும் செயல் என்று அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் கண்டித்துள்ளது.