ஸ்ரீ சத்ய சாய வித்யா விஹாரில் நடைபெற்ற இரண்டு நாள் 'ஸ்பிரிட் ஆஃப் இன்டிபென்டன்ஸ்' கண்காட்சி மற்றும் கலாச்சார நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்தது. சுதந்திரப் போராட்ட வீரர்களின் பங்களிப்பை மாணவர்கள் இதில் சிறப்பாக வெளிப்படுத்தினர்.
ஸ்ரீ சத்ய சாய வித்யா விஹாரில் நடைபெற்ற 'ஸ்பிரிட் ஆஃப் இன்டிபென்டன்ஸ் – ஒன் நேஷன், ஒன் ஸ்பிரிட், ஒன் ஹார்ட்' கண்காட்சி மற்றும் கலாச்சார நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நிறைவுற்றது. ஆந்திரப் பிரதேசம் மெடெக் மண்டலத்தின் (AMTZ) நிர்வாக இயக்குனர் மற்றும் நிறுவனர் சிஇஓ ஜிதேந்திர ஷர்மா இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
சுமார் 500 மாணவர்களால் உருவாக்கப்பட்ட 170-க்கும் மேற்பட்ட படைப்புகள் சுதந்திரப் போராட்டம் மற்றும் அறிவுசார் விழிப்புணர்வு ஆகியவற்றைப் பிரதிபலித்தன. மேலும், 300 மாணவர்கள் பங்கேற்ற நடனம் மற்றும் இசை நிகழ்ச்சிகள் உடல் மற்றும் ஆன்மீக சுதந்திரத்தை அழகாக சித்தரித்தன.