இந்தோனேசியாவின் மதுரா தீவிற்கு அருகே 271 பேர் சென்றுகொண்டிருந்த படகில் தீ விபத்து ஏற்பட்டு 5 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 41 பேர் காணவில்லை.
இந்தோனேசியாவின் தேசிய தேடல் மற்றும் மீட்பு முகமையின் (Basarnas) படி, கடலில் 271 பயணிகளுடன் சென்றுகொண்டிருந்த ஒரு படகில் தீ விபத்து ஏற்பட்டு 5 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 41 பேர் காணாமல் போயுள்ளனர். கிழக்கு ஜாவாவின் சுரபாயாவிலிருந்து தெற்கு சுலாவேசியின் மக்காஸர் நோக்கிச் சென்றுகொண்டிருந்த போது மதுரா தீவிற்கு அருகே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
உள்ளூர் செய்தி நிறுவனமான iNews வெளியிட்ட காட்சிகளில், உயிர் காக்கும் உடை (life jackets) அணிந்த ஏராளமான மக்கள் உயிர் காக்கும் படகுகளில் இருப்பதை காண முடிகிறது. தீப்பிழம்புகள் மற்றும் புகை சூழ்ந்த படகிலிருந்து மக்கள் கீழே இறங்குவதையும் காட்சிகள் காட்டுகின்றன.