இந்தோனேசியாவின் புரோமோ தேசிய பூங்காவில் பரவி வரும் காட்டுத்தீயை கட்டுப்படுத்த விமானங்கள் மற்றும் நூற்றுக்கணக்கான தீயணைப்பு வீரர்கள் அனுப்பப்பட்டுள்ளனர். எல் நினோ மற்றும் வறண்ட காற்றினால் இந்த தீ விபத்து தீவிரமடைந்துள்ளது.

இந்தோனேசியாவின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான புரோமோ டெங்கர் செமரு தேசிய பூங்காவில் பயங்கர காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. கிழக்கு ஜாவாவில் உள்ள இந்த மலையின் சுமார் 176 ஹெக்டேர் பகுதி தீயினால் பாதிக்கப்பட்டுள்ளது. நிலைமையைக் கட்டுப்படுத்த ஹெலிகாப்டர்கள், ட்ரோன்கள் மற்றும் நூற்றுக்கணக்கான தீயணைப்பு வீரர்கள், ராணுவத்தினர் மற்றும் தன்னார்வலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மலைப்பகுதியின் கடினமான நிலப்பரப்பு காரணமாக தீயை அணைப்பது சவாலாக உள்ளது. ஆஸ்திரேலியாவிலிருந்து வீசும் வறண்ட காற்று மற்றும் எல் நினோ வானிலை மாற்றத்தினால் இந்தத் தீ விபத்து வேகமாகப் பரவி வருகிறது. பாதுகாப்பு கருதி பூங்கா தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.