கிழக்கு ஜாவாவில் உள்ள மவுண்ட் புரோமோ பகுதியில் காட்டுத்தீ தீவிரமடைவதால் இந்தோனேசியா அந்த தேசிய பூங்காவை மூடியுள்ளது. தீயை அணைக்க விமானங்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் அனுப்பப்பட்டுள்ளனர்.

கிழக்கு ஜாவாவில் உள்ள மவுண்ட் புரோமோ பகுதியில் காட்டுத்தீ பரவி வருவதால், அந்த தேசிய பூங்காவிற்குச் செல்லும் அனைத்து பாதைகளும் மூடப்பட்டுள்ளன. சுமார் 435 ஏக்கர் நிலப்பரப்பு தீயினால் பாதிக்கப்பட்டுள்ளது.

தீயைக் கட்டுப்படுத்த இந்தோனேசியா அரசு சிறப்பு விமானங்கள் மற்றும் தீயணைப்பு வீரர்களை அனுப்பியுள்ளது. சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இந்த முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.