அமெரிக்காவின் டூசானில் தனது காதலியை கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட 20 வயது இந்திய மாணவர், இந்தியாவுக்கு தப்பிச் செல்லும் வழியில் ஜெர்மனியில் கைது செய்யப்பட்டுள்ளார்.

அரிசோனா பல்கலைக்கழக மாணவரான வருண் பாச்சி காரி, ஆகஸ்ட் 6 அன்று ஜூலிசா ரூபி சலாசர் என்ற 19 வயது பெண்ணைக் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். கொலைக்குப் பிறகு, அவர் டூசான் விமான நிலையத்திலிருந்து ஜெர்மனிக்கு விமானத்தில் சென்றார். அங்கு எஃப்.பி.ஐ மற்றும் ஜெர்மன் காவல்துறையினரின் கூட்டு நடவடிக்கையால் அவர் கைது செய்யப்பட்டார்.

கொலைக்குப் பிறகு, பாதிக்கப்பட்டவரின் மொபைல் மற்றும் கிரெடிட் கார்டுகளை திருடி, அவரது தாய்க்கு போலி குறுஞ்செய்திகளை அனுப்பியதாகக் கூறப்படுகிறது. முன்னதாக, வருண் மீது குடும்ப வன்முறை மற்றும் தாக்குதல் தொடர்பான புகார்கள் இருந்ததாகத் தெரிகிறது. தற்போது அவர் அரிசோனாவிற்கு நாடுகடத்தப்பட உள்ளார்.