சீனாவின் கிழக்குக் கடற்கரையைத் தாக்கிய சக்திவாய்ந்த டால்பின் சூறாவளியால் பல மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பலத்த காற்று மற்றும் கனமழையினால் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை மாலை சீனாவின் கிழக்குக் கடற்கரையை டால்பின் சூறாவளி தாக்கியது. இதன் காரணமாக ஜெஜியாங் மாகாணத்தின் தைஜூ மற்றும் புஜியான் மாகாணத்தின் வடக்குப் பகுதிகளில் மணிக்கு 151 கி.மீ வேகத்தில் காற்று வீசியது. வெள்ளம் மற்றும் நிலச்சரிவு அபாயத்தைக் கருத்தில் கொண்டு, தைஜூவில் சுமார் 3,90,000 பேரும், ஷாங்காயில் 30,000-க்கும் அதிகமான மக்களும் வெளியேற்றப்பட்டனர்.
ஷாங்காயின் ஹாங்ஜியாவ் மற்றும் புடோங் விமான நிலையங்களில் 1,300-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. மேலும், ஜெஜியாங் மற்றும் புஜியான் மாகாணங்களில் 200-க்கும் மேற்பட்ட படகுப் போக்குவரத்து சேவைகள் நிறுத்தப்பட்டன. இந்த சூறாவளியின் தாக்கம் தைவான் மற்றும் பிலிப்பைன்ஸிலும் உணரப்பட்டது, அங்கு கனமழையினால் நிலச்சரிவுகள் ஏற்பட்டு உயிரிழப்புகள் மற்றும் பாதிப்புகள் பதிவாகியுள்ளன.