ஐரோப்பாவில் தொடரும் வெப்ப அலை காரணமாக நதிகளின் நீர்மட்டம் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு குறைந்துள்ளது. ரைன் நதியில் நீர் பற்றாக்குறையால் கப்பல்கள் இயங்க முடியாமல் தவிக்கின்றன.

ஐரோப்பாவில் நிலவி வரும் கடுமையான வெப்ப அலை காரணமாக முக்கிய நதிகளின் நீர்மட்டம் மிகக் குறைந்த நிலையை எட்டியுள்ளது. குறிப்பாக ரைன் நதியில் நீர் அளவு குறைந்துள்ளதால், சரக்குக் கப்பல்கள் நடுக்கடலில் அல்லது மணலில் சிக்கித் தவிக்கின்றன.

நெதர்லாந்தை விட ஜெர்மனியின் கீழ் ரைன் பகுதிகளில் நீர் தட்டுப்பாடு அதிகமாக இருப்பதாக பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர். இந்தச் சூழலைச் சமாளிக்க ஆழமற்ற நீரில் இயங்கக்கூடிய கப்பல்களை உருவாக்க ஐரோப்பா வலியுறுத்தப்பட்டுள்ளது.