இந்திய கோஸ்ட் கார்டு அதிகாரிகளின் பணி மற்றும் பதவி உயர்வுக்கான பாலின நடுநிலை கட்டமைப்பை ராஜநாத் சிங் அறிமுகப்படுத்தியுள்ளார். மேலும், கடலில் காணாமல் போன வீரர்களின் குடும்பங்களுக்கு விரைவாக இழப்பீடு வழங்கும் முறையும் எளிமையாக்கப்பட்டுள்ளது.

மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜநாத் சிங், இந்திய கோஸ்ட் கார்டுக்காக இரண்டு முக்கிய மனிதவள கொள்கை சீர்திருத்தங்களை அறிவித்துள்ளார். இந்த புதிய கொள்கையின் மூலம், பெண் அதிகாரிகளின் நியமனம் மற்றும் தொழில்முறை முன்னேற்றத்தில் பாலின சமத்துவத்தை உறுதி செய்யும் கட்டமைப்பானது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் பெண்கள் மற்றும் ஆண்கள் இருவரும் சமமான வாய்ப்புகளைப் பெறுவார்கள்.

இரண்டாவது சீர்திருத்தம், கடலில் பணியின் போது காணாமல் போன வீரர்களின் குடும்பத்தினருக்கு விரைவான நிதி உதவியை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. நிர்வாகத் தாமதங்களைக் குறைக்க, உரிய அதிகாரிகளுக்கு அத்தகைய வீரர்களை 'மறைந்ததாகக் கருதி' இழப்பீடு மற்றும் இதர சலுகைகளை உடனடியாக வழங்க அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.