பிரதமர் மோடியின் வாக்குறுதிக்குப் பிறகு, வினாத்தாள் கசிவைத் தடுக்க கடுமையான சட்டங்களைக் கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. பொதுத் தேர்வு திருத்த மசோதா விரைவில் மக்களவையில் தாக்கல் செய்யப்பட உள்ளது.

வினாத்தாள் கசிவை தடுக்கவும், குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும் பிரதமர் நரேந்திர மோடியின் அமைச்சரவை முடிவு செய்துள்ளது. இதற்காக 'பொதுத் தேர்வு திருத்த மசோதா' திங்கள்கிழமை மக்களவையில் தாக்கல் செய்யப்பட உள்ளது.

இந்த புதிய மசோதாவின் கீழ், குற்றவாளிகளுக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் 10 கோடி ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், கடுமையான சட்டங்கள் மட்டுமே இதற்குத் தீர்வாகுமா என்ற விவாதம் எழுந்துள்ளது.