Mahindra & Mahindra தனது லாரி மற்றும் பேருந்து பிரிவை ₹525 கோடியில் SML Mahindra நிறுவனத்திற்கு விற்க முடிவு செய்துள்ளது. இந்த செய்தியால் SML Mahindra பங்குகள் 20% மேல் உயர்ந்துள்ளது.

Mahindra & Mahindra (M&M) தனது லாரி மற்றும் பேருந்து உற்பத்தி பிரிவை SML Mahindra நிறுவனத்திற்கு ₹525 கோடிக்கு விற்பனை செய்ய உள்ளது. இந்த நடவடிக்கையின் மூலம் M&M தனது வணிக செயல்பாடுகளை ஒருங்கிணைக்கத் திட்டமிட்டுள்ளது.

இந்த அறிவிப்பு வெளியானவுடன், பங்குச் சந்தையில் SML Mahindra பங்குகள் பெரும் எழுச்சி கண்டுள்ளன. பங்குகள் 20% upper circuit எட்டியுள்ளன, இது முதலீட்டாளர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.