நெதர்லாந்தைச் சேர்ந்த வொண்டர்ஃபுல் என்ற AI நிறுவனம் மும்பை மற்றும் பெங்களூருவில் தனது அலுவலகங்களை அமைத்து இந்தியாவில் தனது செயல்பாடுகளைத் தொடங்கியுள்ளது. இந்திய சந்தையின் வளர்ச்சிக்காக நூற்றுக்கணக்கான பணியாளர்களைத் தேர்வு செய்ய நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

நெதர்லாந்தைச் சேர்ந்த நிறுவனமான வொண்டர்ஃபுல், மும்பை மற்றும் பெங்களூருவில் அலுவலகங்களை அமைப்பதன் மூலம் இந்தியாவில் தனது வணிக நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளதாக அறிவித்துள்ளது. 30-க்கும் மேற்பட்ட நாடுகளில் செயல்பட்டு வரும் இந்நிறுவனம், இந்தியாவிற்கான நிர்வாக இயக்குநராக பாவிக் ரத்தோடை நியமித்துள்ளது.

இந்திய சந்தைக்கு சேவை செய்ய நூற்றுக்கணக்கான பணியாளர்களைத் தேர்வு செய்யப் போவதாக நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் சிடிஓ ரோயி லாலாசர் தெரிவித்தார். தொலைத்தொடர்பு, வங்கி மற்றும் நிதிச் சேவைகள் (BFSI), ஊடகம், சுகாதாரம் மற்றும் சில்லறை விற்பனை போன்ற முக்கியத் துறைகளில் உள்ள நிறுவனங்களுக்கு வொண்டர்ஃபுல் தனது ஏஐ சேவைகளை வழங்கும்.