குவாலியலில் மின்சார பில் விவகாரம் தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், வீட்டு உரிமையாளர் தனது செல்லப் பிராணிகளான நாய்களை ஊழியர்கள் மீது விட, ஊழியர்கள் தாக்கமடைந்தனர்.
மத்தியப் பிரதேசத்தின் குவாலியர் மாவட்டம், ஹசிரா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இந்திரா நகர் பகுதியில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. மின் பயன்பாட்டு அலகுகளைப் பதிவு செய்யச் சென்ற இரண்டு ஒப்பந்த ஊழியர்கள் மீது பீரு தோமர் என்ற நபர் தாக்குதல் நடத்தியுள்ளார். மின்சாரக் கட்டணம் குறித்த விவாதத்தைத் தொடர்ந்து, அவர் தனது ரட்வைலர், பிட்புல் மற்றும் ஜெர்மன் ஷெப்பர்ட் வகை நாய்களை ஊழியர்கள் மீது விடுவித்துள்ளார்.
இந்தத் தாக்குதலில் ஒரு ஊழியர் நாய்களால் கடிக்கப்பட்டு காயமடைந்தார். மேலும், குற்றவாளி ஊழியர்களைத் தாக்கி, அவர்களின் மீட்டர் அளவிடும் இயந்திரத்தையும் உடைத்ததாகக் கூறப்படுகிறது. காவல்துறையினர் பீரு தோமரை கைது செய்து, விலங்குகளின் மீது கவனக்குறைவாக நடந்துகொண்டது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.