ஜூலை 30 முதல் தொடங்கவுள்ள கான்வர் யாத்திரை முகாம்களுக்கு 24 மணி நேரமும் சுகாதார, மருத்துவ மற்றும் மின்சார வசதிகளை டெல்லி அரசு வழங்கும் என்று முதல்வர் ரேகா குப்தா தெரிவித்துள்ளார்.
டெல்லி அரசு கான்வர் யாத்திரை பக்தர்களுக்காக அமைக்கப்படும் முகாம்களில் 24 மணி நேரமும் சுகாதாரம், மருத்துவப் பராமரிப்பு, மின்சாரம் மற்றும் தண்ணீர் வசதிகளை உறுதி செய்யும் என்று முதல்வர் ரேகா குப்தா அறிவித்துள்ளார். இந்தத் திருவிழா சுமூகமாகவும் பாதுகாப்பாகவும் நடைபெறுவதை உறுதி செய்ய அனைத்துத் துறைகளுக்கும் அவர் உத்தரவிட்டுள்ளார்.
பக்தர்களை வரவேற்க பல வரவேற்புக் Gate-கள் அமைக்கப்பட்டு, மலர் தூவி வரவேற்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், யாத்திரை குழுக்களின் அனுமதிகளை எளிதாக்க 'சிங்கிள்-விண்டோ' முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு மேலாண்மைக்காகவும் சிறப்புத் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.